கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்,கடந்த இரண்டு நாட்களில் 15 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதேபோன்று கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் காலணி அணிந்து நடந்து செல்ல அனுமதி மறுக்கபட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.குமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு தினமும் காலை 8மணி முதல் நாள் 4 மணி வரை படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் படகு போக்குவரத்து காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக நடக்கிறது என பூம்புகார் கப்பல்போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





