சிறுவனுக்கு பாலியல் தொல்லை அரசு மருத்துவமனை ஊழியர் கைது.!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனை தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுவனை அமர வைத்துவிட்டு தாய் மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளரான ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அந்த சிறுவனை மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் நடந்த சம்பவத்தை அழுதபடியே தனது தாயிடம் அந்த சிறுவன் கூறினான். இதனை கேட்டு சக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அந்த துப்புரவு பணியாளரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரமீஸ் மீது காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அரசு மருத்துவமனை ஊழியர் கைது.!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.