சென்னையில் இன்னும், நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை

சென்னை:
நடப்பு ஆண்டு முதல் ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்கிறது. அதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முக்கிய நகரங்களில் ஜி20 மாநாடு தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் நிதி, கல்வி, உணவு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு, எரிபொருள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட தலைப்புகளை மையப்படுத்தி நடைபெறும்.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் கல்வி சம்பந்தமான மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் 2வது மாநாடு நிதி கட்டமைப்புக்காக இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு சென்னை கிண்டியில் உள்ள சோழா ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி தற்போது நாளை வரை (மார்ச் 26) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் இன்னும், நாளையும் டிரோன்கள் பறக்கத் தடை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.