சென்னை:
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அதீத வேகத்தில் பைக்கில் செல்லும் போது நிகழும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நேற்று நள்ளிரவு 1 .30 மணி அளவில் இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். இதனை காவல் துறையின் வாகன தணிக்கையின் போது கண்டனர்.
சென்னை முழுவதும் பைக் ரேஸை தடுக்க சிறப்பு வாகன தணிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பைக் ரேஸில் ஈடுப்பட்ட நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் 22 வழக்குகள் பதிந்து 22 இருசக்கர வாகங்களையும், சட்டம் ஒழுங்கு போலீசார் 11 வழக்குகள் பதிந்து 11 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தமாக 33 வழக்குகள் பதிந்து 33 இரு சக்கர வாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீண்டும் இது போன்று பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






