அண்மை செய்தி
அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

செஸ் வீர்ர் குகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்

சென்னை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீர்ர் குகேஷ் அவர்கள் சந்தித்து ஆசி பெற்றர். அப்போது முதலமைச்சர் குகேஷ்க்கு நினைவுப் பரிசு வழங்கி னார். நம்பர் ஒன் செஸ் வீரரான குகேஷிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் ஆகியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் (லைவ் ரேட்டிங்) இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை அவர் முந்தியதன் மூலம் இந்த சாதனையைப் படைத்துள்ளார். உலக அளவில் ஃபிடே ஓபன் தரவரிசையில் அவர் 8-ம் இடம் பெற்றுள்ளார்.

செஸ் வரலாற்றில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்ற மூன்றாவது இளம் வயது நபர் என குகேஷ் அறியப்படுகிறார். கடந்த 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றார். இந்நிலையில், இந்திய செஸ் வீரர்களில் முதலிடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். தனது ஆஸ்தான வழிகாட்டி விஸ்வநாதன் ஆனந்தை இதன் மூலம் அவர் முந்தியுள்ளார்.

செப்டம்பர் மாதத்துக்கான உலக தரவரிசையில் 2,758 ரேட்டிங் உடன் எட்டாம் இடத்தில் உள்ளார். அண்மையில் முடிந்த செஸ் உலகக் கோப்பை தொடரில் காலிறுதி போட்டி வரை அவர் முன்னேறி இருந்தார். தற்போது உலா தரவரிசையில் டாப் 10-ல் இடம் பிடித்துள்ள அவர், கரோனா தொற்றின் போது செஸ் விளையாட்டு சார்ந்த முக்கிய அம்சங்களில் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவுடன் கவனம் செலுத்தினார். அதன் பலனாக உலக தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்

டாப் 25, டாப் 10 இடங்கள் என தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் டாப் 25-ல் இடம் பிடித்துள்ள இந்தியர்களில் குகேஷ் 8-ம் இடத்தையும். விஸ்வநாதன் ஆனந்த் 9-ம் இடத்தையும், பிரக்ஞானந்தா 19-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், செஸ் வீர்ர் குகேஷ் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றர். அப்போது முதலமைச்சர் குகேஷ் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம். வேல்மோகன் மற்றும் குகேஷ் அவர்களின் பெற்றோர் ஆகியோர் உடன்யிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

செஸ் வீர்ர் குகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்