சென்னை சைதாப்பேட்டையில் மிக்ஜாம் புயல் பாதிக்கபட்ட மக்களுக்கு தொடா்ந்து நிவாரண பொருட்களை பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இன்று ஆலந்துார் ரோடு, குயவா் வீதி, ஜெயராம் தெரு, பஜார் சாலை, பூக்கார தெரு, தா்மராஜா கோயில் தெரு, கிழக்கு ஜோன்ஸ் சாலை, வேஷாதிரி தெரு உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நல்வாழ்வுத்துறை அமைச்சரும் தென் சென்னை மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் அவர்கள் பெட் ஷிட், அரிசி வழங்கினார். உடன் 10-வது மண்டல குழு தலைவரும் மாமன்ற உறுப்பினருமான எம்.கிருஷ்ணமூா்த்தி, வட்ட செயலாளர்கள் எஸ்.பி. கோதண்டம், எம்.நாகா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





