சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு மகப்பேறு மருத்துவனை எதிரில் சாக்கடை நீர் வழிந்து வீதியில் ஓடுகிறது. ஜீனிஸ் பிரதானச்சாலை சாலையில் கழிவு நீர்த் தேக்கம் ஏற்படுவதால் மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள், மகளிர், குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் போன்றோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கலைஞர் வளைவிலிருந்து ஜீனிஸ் சாலை முழுவதும் சாக்கடை நீரால் நிரம்பி வழிவதா இந்த சாலை வழியாகச் செல்லும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்வது சிரமாகிறது. யாராலும் கடந்து செல்ல முடியவில்லை. அங்குள்ள பெரிய நிறுவனங்கள் கடைகள் சந்தைகள், தெரு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. இதற்குக் குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அடிக்கடி இந்த பிரச்சனை நிலவுகிறது. வாகன ஓட்டிகள் அசோக் நகர் கோயம்பேடு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்ய குறைந்தது 2 லிருந்து 3நாட்கல் ஆகிறது. மக்கள் முகசுலிக்கு விதமாக மிகுந்த துருநாற்றம் ஏற்படுகிறது. மக்களின் நலன் கருதி சாக்கடை நீ பிரச்சனைக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காணுமா இந்த அரசு?










