மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்திக்க செல்லும்போது, அடையாறு மண்டலம் 169-வது வார்டுக்கு உட்பட்ட காவிரி நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை கிழக்கு பகுதியில் 70 அடி சாலையின் தெற்கில் உள்ள வீட்டின் உரிமையாளர் தனது வீட்டுக்காக 70 அடி சாலையின் நடைபாதையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொண்டிருந்ததையும், ஆழ்துளை கிணறு அமைக்கும்போது வெளியேறும் ஈரக்களிமண் கழிவானது சாலை முழுவதும் பரவி கிடந்ததையும் பார்த்து, உடனடியாக இந்த பணியை தடுத்து நிறுத்தி, இதனை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அந்த இடத்தை பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர் சுரேஷ் மீதும், ஆழ்துளை கிணறு அமைத்த வாகனத்தை கைப்பற்றி அதன் உரிமையாளர் மீதும் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள செயற்பொறியாளர் புருசோத்தமன் வாயிலாக போலீசில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





