சென்னை:
சென்னை சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள பாதாளா சாக்கடையின் இன்று காலை திடீரென சிவப்பு நிறத்தில் ஆயில் குபுகுபுவென வெளியேறி சாலைகளில் விரிந்தோடியது. இதனை அறியாத வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாதாரண சாக்கடை நீராகத்தான் இருக்குமோ என்று கருதி அதனை கடந்தனர். இதில் சுமார் 4 முதல் 5 பேர் கீழே வழுக்க விழுந்தனர்.
இதன் பிறகுதான் இது சாதாரண நீர் கிடையாது. ஆயில் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இது எங்கிருந்து வருகிறது என்று கவனித்துப் பார்த்தால் ஜீனில் சாலையில் உள்ள பிரபல பெரிய பிரியாணி கடையில் இருந்து வருவது தெரியவந்தது.

இதனை கண்ட போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த கழிவு ஆயில் பரவயிருந்த பகுதிகளை சாலை தடுப்பு அமைத்தனர். வாகனங்கள் செல்ல சிறிய பாதை மட்டுமே இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெருக்கடியான பகுதியாகும். இது மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அவர்கள், சாலை¬யில் பரவியிருந்த ஆயில் மீது மணலை போட்டு மூடினர். பிறகு பாதாள சாக்டை மூடியில் இருந்து கசியும் கழிவு ஆயிலை டேங்கர் லாரியில் ஏற்றி கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
இதுபோன்று பெரிய பெரிய நிறுவனங்களின் அஜாக்கிரதையால் எத்தனை எத்தனை பேருக்குத்தான் சிரமம். உயிர்கூட போய் இருக்க வாய்ப்பு உள்ளது. இனி இதுபோன்று நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் இந்த பிரபல பிரியாணி கடை நிறுவனத்தினரை சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறையும், குடிநீர் வாரியமும், தமிழக அரசும், அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும். சுகாதாரத்தை பேனிக்காக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.







