ஜம்மு-காஷ்மீருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்து இணைப்பு, ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தைக் காணொலி  மூலம் தொடங்கி வைத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் ரெயில்வேயில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பகுதியில் நடைபெற்று வரும் ரயில் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். ஜம்மு-காஷ்மீரை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதிலும், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் அவற்றின் பங்கை அவர் சுட்டிக் காட்டினார்.நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த ரயில்வே கோட்டம் நிறுவியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையுடன் ஒருங்கிணைப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாடு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் நிலவிய போக்குவரத்து சவால்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்த காலதாமதங்கள்  ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆனால் அண்மை ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வலிமையின் அடையாளத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தை விடவும் உயர்ந்து நிற்கும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் போக்குவரத்து இணைப்பு, ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.