சென்னை:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3 நாட்களாக ஏற்றத்துடேன காணப்பட்டு வருகிறது. ஆனால் இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை உச்சம் கண்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,590க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 1.30 காசுகள் அதிகரித்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து உச்சத்தை தொட்டதால் தங்கம் நகை வாங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






