காசி தமிழ்ச் சங்கமம் இரண்டாம் கட்டத்தில், இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த கலாச்சாரக் குழுவினர் அனுமன் படித்துறைக்குச் சென்றனர். அங்கு, புனிதமான கங்கை நதியில் புனித நீராடி, அன்னை தேவியை வழிபட்டனர். அங்கிருந்த ஆச்சார்யர்கள் கங்கையின் பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து அவர்களுக்கு விரிவாக விளக்கினர்.
கங்கையில் நீராடியது குறித்தும் ஆச்சார்யர்களிடம் உரையாடியது குறித்தும் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோயில்களின் வரலாற்றை அறியவும் அவர்கள் ஆர்வம் காட்டினர்.
புனித நதியான கங்கையில் புனித நீராடிய பிறகு, அனைத்து விருந்தினர்களும் படித்துறை அருகே அமைந்துள்ள பழமையான கோயில்களுக்குச் சென்றனர்.
அனைத்து விருந்தினர்களுக்கும் கோவில்களின் வரலாறு, தெய்வீகம் மற்றும் மகத்துவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர், தமிழ் விருந்தினர்கள் ஹனுமான் படித்துறையில் அமைந்துள்ள சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்குச் சென்று பாரதியின் வழிவந்த குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தனர்.
ஹனுமான் படித்துறை வீதிகளிலும் கலாச்சார குழுவினர் சுற்றிப்பார்த்தனர்.
கலாச்சார குழுவினர் சுப்ரமணிய பாரதியின் இல்லத்திற்கு அருகில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு அதன் வரலாறு குறித்து தெளிவுபெற்றனர். சுப்ரமணிய பாரதியின் இல்லத்துக்குச் சென்ற குழுவினர், பின்னர் காஞ்சி மடத்துக்கும் சென்று வழிபட்டனர். காசியில் தென்னிந்திய கோவிலைக் காணக் கூட்டம் உற்சாகமாக காணப்பட்டது. அனைவரும் கோவில்களை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பண்டித வெங்கட் ராமன் கணபதி குழுவின் சுற்றுப்பயணத்தின் பொறுப்பாளராக செயல்பட்டார்.






