1. அறத்துப்பால் : 2. இனியவை கூறல. : 3. ஒழுக்கமுடைமை
அறம் தவறாத, கடமை தவறாத ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். (குறள் 134)
விளக்கம்:
திருமறைக் கருத்துகளை மறந்து போனாலும் அதைத் திரும்பப் படித்துக் கொள்ளலாம். ஆனால் நற்செயல்களை மேற்கொள்ள வேண்டிய பார்ப்பான் தீயவர்களோடு இணைந்து ஒழுக்கம் குறைந்தவனானால் அவருடைய சிறப்பு அழிந்துவிடும்.







