17. அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருந்தல்
—————————————-
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள்: 162)
விளக்கம்:
எவரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், அது அவன் பெறத்தக்க ஒப்பான பெரும்பேறு வேறொன்றும் இல்லை.






