தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டாரத்திற்குட்பட்ட பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பீரகுப்பத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார அலகு கட்டிடத்தையும், வீரமங்கலத்தில் ரூ25 இலட்சம் மதிப்பீட்டிலும் பாண்ரவேட்டில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் மத்தூரில் ரூ20 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களையும் என மொத்தம் ரூ1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டிடங்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டார்கள். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சி.சேகர், துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால் (திருவள்ளூர்), செந்தில்குமார் (பூந்தமல்லி), திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.ரேவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





