சென்னை:
தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பைகளை சேகரிப்பவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய சஃபாய் கரம்சாரிஸ் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குப்பைகளை சேகரிப்பவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டம் குறித்த பயிற்சி முகாம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமில் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி முனைவர் டி.ஜி.சீனிவாசன் மற்றும் நவஜீவன் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஹரிகுமார் மற்றும் எஸ்.ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இத்தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலரும் வெளியிட்டுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
திருக்குறள் 48:ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து விளக்கம்:தானும் அறநெறியில் தவறாமல்





