தேசிய டைவிங் போட்டி: வெள்ளி வென்றார் அபிஷேக் !!

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 39-வது சப்-ஜூனியரமற்றும் 49-வது ஜுனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நேற்று தொடங்கியது.

வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

டைலிங் போட்டியில் குரூப்-1 சிறுவர்களுக்கான (16, 17, 18 வயது) 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு பிரிவில் சர்வீசஸ் வீரர் இண்டிவிர் சாய்ராம் 415.20 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் யூ அபிஷேக் 369.15 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
இதே பிரிவில் சிறுமியருக்கான போட்டியில் மத்திய பிரதேச வீராங்களை பாலக் சர்மா 292 புள்ளிகள் எடுத்து முதலிடமும், பெங்கால் வீராங்களை அனுஷா தாரா 257 புள்ளிகள் பெற்று 2-வது இடமும் பிடித்தனர்.

ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் சிறுவர்கள் பிரிவில் பெங்கால் அணி 22-2 என்ற கணக்கில் ஹரியாணாவையும், குஜராத் அணி 12-5 என்ற கணக்கில் தமிழக அணியையும் வென்றன. சிறுமியர் பிரிவில் நடத்த ஆட்டங்களில் கேரள அணி 8-1 என்ற கணக்கில் டெல்லியையும், கர்நாடகா அணி 26-1 என்ற கணக்கில் தமிழக அணியையும் நோற்கடித்தன.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய டைவிங் போட்டி: வெள்ளி வென்றார் அபிஷேக் !!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.