திமுகவின் ‘ஆண்டபரம்பரை’ அமைச்சர் திருப்பரங்குன்றத்தில் இசுலாமியர் உரிமை மறுப்பை என்ன செய்யப்போகிறார்? மதுரையின் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம்தொட்டு இசுலாமியர் வழிபாட்டு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. காஜிமார் பெரிய பள்ளிவாசல் சுந்தரபாண்டிய அரசனால் விரிவாக்கம் செய்யப்படவும், மெருகேற்றப்படவும் செய்யப்பட்டது. ஆனால் இன்றய நிலை என்ன அமைச்சர் அவர்களே? திமுக அரசு இசுலாமியர் மீது நிகழ்த்தப்படும் காவல்துறையின் அடக்குமுறைகளை எத்தனைக் காலம் அனுமதிக்கும்?மறுபுறத்தில் தலித்துகள் மீதான தாக்குதல், படுகொலைகள். அண்ணல் படம் சிதைக்கப்படுதல், பட்டியல் இளைஞர் காவல்துறை கண்முன் படுகொலை செய்யப்படுதல் என அனைத்தும் காவல்துறை தொடர்புடையதாக உள்ளது. தமிழ்நாட்டை யார் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்?
காவல்துறை அதிகாரிகளே அனைத்தையும் முடிவு செய்வார்களென்றால் தேர்தலும், சட்டமன்றமும், அமைச்சர்களும் எதற்கு?

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





