பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனை!!

சென்னை :
வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் தினமும் 650 லாரிகளில் 7,000 டன் காய்கறிகள் வருகிறது. தினமும் 60 சரக்கு வாகனங்களில் வெங்காயம் வருகிறது. இந்த நிலையில், வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் சில கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.100ஐ தான்டியது.

இந்த விலையேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் வெங்காயம் விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலையை முழு கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு முழு வீச்சில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயம் ரூ.30க்கு விற்பனை!!

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி