சேலம்:
கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள் என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை சேலம் சென்றார். அதனை தொடர்ந்து இன்று காலை சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
அதிமுக – பா.ஜ.க. கூட்டணி பற்றி முடிவு செய்ய வேண்டியவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர, மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. இங்கே இருக்கின்ற தலைவர்களும் மத்தியில் உள்ள தலைவர்களே கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது ஜனநாயக உரிமை என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பா.ஜ.க. கூட்டணி இறுதியானது என அமித் ஷா கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலில், மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை இறுதி செய்பவர்கள். அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதாக டெல்லி தலைவர்களே சொல்லிவிட்டனர். மேலும், அதிமுகவில் இருந்து விலகிய ஒரு சிலரை தவிர அனைவரும் மீண்டும் இணைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





