புதுச்சேரி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், “பெண்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்: விழிப்புணர்வு மற்றும் ஆதரிப்பு” நிகழ்ச்சி

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெண்கள் அதிகாரமளிப்பு மையம் மற்றும் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இணைந்து “பெண்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்: விழிப்புணர்வு மற்றும் ஆதரிப்பு” என்ற தலைப்பில் நிகழ்ச்சி இன்று பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தியது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு தினம் ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க நாட்களைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர், P. முத்துமீனா, SP (Wireless / Cyber Crime) Dr. S. பாஸ்கரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற வல்லுநர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்துப் பணிபுரியும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பணிபுரியும் பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் அர்ப்பணிப்புடன், பல்கலைக்கழக வளாகம் இந்த விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அனைத்து விருந்தினர்களையும், தேசியப் பல்கல்ஐக்கழகத்தின் பொறுப்பு உதவி இயக்குனர் அர்ஷ் வரவேற்றார். நிகழ்ச்சியில் முதலாவதாக “பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு” என்ற தலைப்பில் பல்கலைக்கழக குற்றவியல் உதவிப் பேராசிரியர் திருமதி சிவலட்சுமி ஆறுமுகம் உரையாற்றினார்.

பின்னர், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர், நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப இயக்குநர், பிரைம் ஃபோர்ட், சென்னை, ஸ்ரீராம் சைபர் பாதுகாப்பு பற்றிய தவறான புரிதல்களைப் பற்றியும் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் மற்றும் துணைச் செயலாளர் பி.முத்துமீனா நன்றியுரையாற்றினார்.

தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம், தேசிய பாதுகாப்பு மற்றும் காவல்துறைக்கான கல்வி-ஆராய்ச்சி-பயிற்சி சுற்றுச்சூழல் அமைப்பாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சேவையை நாட்டிற்கு விரிவுபடுத்தும் நோக்கத்துடன் , அதன் நான்காவது விரிவாக்க வளாகத்தை சமீபத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திறந்து வைத்தது. இந்த வளாகம் குற்றவியல் மற்றும் காவல்துறை நிர்வாகத்தில் இளங்கலை, அத்துடன் சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தடயவியல் திட்டத்தில் முதுகலை டிப்ளமோ ஆகியவற்றை வழங்குகிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

புதுச்சேரி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், “பெண்களுக்கான பாதுகாப்பான உலகத்தை உருவாக்குதல்: விழிப்புணர்வு மற்றும் ஆதரிப்பு” நிகழ்ச்சி

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு