சைதாபேட்டை : நற்கருணை பெருவிழா முன்னிட்டு பங்கில் உள்ள குடும்ப பிள்ளைகளுக்கு புது நன்மை (நற்கருணை) கொடுக்கும் நாளாக கொண்டாடுவது இந்நாளின் நோக்கமாகும். ஆகவே பங்குகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் இயேசு கிருஸ்து வழங்கிய நற்கருணையை முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள். பங்கு ஆலையங்களில் 10 நாள் நடக்கும் திருவிழாக்களில் முக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத் தம்பதியனிரின் திருமண நாள் எவ்வாறு முக்கிய நாளாக கருதுகிறார்களோ அதுபோல இந்நாளை மிக சிறப்பாக திருமண பந்தத்தில் ஏற்படும் உறவு போல புதுநன்மை (திருநற்கருணை) விழாவினை கொண்டாடுகிறார்கள். இது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சின்னமலை அருகில் உள்ள பழம்பெரும் ஆலையமாக புனித ஆரோக்கிய அன்னை மற்றும் புனித தோமையார் திருத்தலம் திகழ்ந்து வருகிறது. இந்நிகழ்விற்கு தகவல் எக்ஸ்பிரஸ் ஆசிரியரும் ஊழியர்களுடன் சென்று பிள்ளைகளை வாழ்த்தினார்.








