பூவிருந்தவல்லி நீதிமன்றத்தின் எதிரில் மெட்ரே ரயில் பணிக்காக பில்லா் போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தின் எதிரில் கழிவு நீர் லாரி ஒன்று நின்றுக்கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயலால் ஏற்ப்பட்ட மழை நீர் சாலையில் தேங்கியுள்ள நிலையில் இந்த கழிவு நீர் லாரியில் இருந்து வெளியேறும் கழிவு நீரின் துார்நாற்றத்தால் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் இந்த சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் மிகு சிரமத்திற்கு ஆளாகிறார்கள். உடனடியாக இந்த கழிவு நீர் லாரியை அப்புறப்படுத்தி சாலை சீர் செய்யப்படுமா என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் எதிா் நோக்கி காத்துள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்றசொற்காத்துச் சோர்விலாள் பெண். விளக்கம்:கற்பு நெறியில்





