பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட தெற்கு
வட்டார துணை ஆணையாளர் அவர்கள் அலுவலகத்தில் இன்று (05.07.2023)
நடைபெற்ற மக்களைத் தேடி மேயர் திட்ட சிறப்பு முகாமில் மேயர் ஆர்.பிரியா கோரிக்கை மனு வழங்க வந்த 50 வயதுடைய பெண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் மேயர் அறிவுறுத்தலின்படி,
உடனடியாக முகாமில் இருந்த மாநகராட்சி மருத்துவர்கள் மூலமாக அவருக்கு முதலுதவி
சிகிச்சை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மேயர் உத்தரவின்படி, கூடுதல்
தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்களும், இணை ஆணையாளர் (பணிகள்)
அவர்களும் உடனடியாக அந்தப் பெண்ணை தங்களுடைய வாகனத்தில் அழைத்துச்
சென்றனர். இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 108
ஆம்புலன்ஸ் வாகனத்தில் மயக்கம் அடைந்த பெண்ணை மாற்றி சிகிச்சை வழங்கப்பட்டு,
இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மயக்கம் தெளிந்த
நிலையில் மருத்துவர் கண்காணிப்பில் அவரின் உடல்நலம் சீராக உள்ளது.
அந்தப் பெண்ணின் கோரிக்கை மனுவில் இந்திரா நகர், 6வது தெருவில்
குப்பைகளை அகற்றுவது தொடர்பாகவும், சாக்கடைக் கழிவுகளை அகற்றுவது குறித்தும்
தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீது உடனடி நடவடிக்கையாக, குப்பைக் கழிவுகள்
மற்றும் சாக்கடைக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள
அலுவலர்களுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள்
உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





