திருவனந்தபுரம்:
கேரள சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் விநாயகன். தான் இதுவரை பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஒருவரை பிடித்து இருந்தால் நேராகவே கேட்பேன் என விநாயகன் ஒருமுறை மேடையில் பேசியது சர்ச்சை ஆனது. இது போன்று அவரது சர்ச்சைகள் ஏராளம்.
தற்போது விநாயகன் வீட்டில் இருந்து சத்தம் அதிகமாக வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த நடிகர் எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில் நுழைந்து ரகளை செய்துள்ளார், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து இருக்கின்றனர். அவரது கைது மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே கேரளா முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மரணம் குறித்து முகநூலில் சர்ச்சைக்குரிய விடியோ பதிவிட்டு இவர் மீது கேரளா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சம்பவம் கூட நிகழ்ந்த நிலையில் தற்போது குடி போதையில் போலீசாரிடம் ரகளை செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.







