மக்கள் மேம்பாட்டு கழகம் மென்மேலும் வளர வேண்டுமென்று பேராயர்கள் ஆயர்கள் குருக்கள் பொதுநியினர்கள் பல்வேறு சபைகளின் பாஸ்ட்டர்கள் போதகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயேசு கிறிஸ்து பிறப்பின் மகத்துமே பேரரசர் அகுஸ்து சீசர் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடந்த உத்தரவிட்டார். சிரியா நாட்டின் குரேனியு ஆளுநராக இருந்த போது முதன் முறையாக மக்கள் தொகை கணக்கெடுக்க பட்டது வரலாறு. இந்திய அரசு மக்களுக்கு வழங்கி இருக்கும் ஆதார் கார்டு அடிப்படையாக கொண்டு மத வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் அவ்வாறு கணக்கெடுப்பை நடத்தினால் உண்மையான கிறித்தவ மக்கள் தொகை கணக்கு வந்து விடும் அதன் படி கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வரையறை செய்ய முடியும்.
இட ஒதுக்கீடு எனும் சமூகநீதி அந்த அந்த மக்களுக்கு உரியது கிடைத்து விட்டால் இந்திய விரைவில் வல்லரசு நாட்டின் பட்டியலில் இடம் பெற்றுவிடும். இப்போது இந்தியாவில் கிறிஸ்தவ இஸ்லாமிய மக்கள் தொகை முறை படுத்தாமல் மத்திய அரசு பொய் கணக்கை காட்டி இரு பெரும் மதத்தை சிறுபான்மையாக சித்தரித்து வருகிறது.
அரசாங்கமே பொய் சொல்வதால் மக்களும் போலியாக இருக்கிறார்கள். பிஜேபி அரசாங்கம் உண்மையான
கணக்கெடுப்பை நடத்தி கிறிஸ்தவ இஸ்லாமிய மக்களுக்கு உரிய வழிபாட்டு உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு இவர்களுக்கான ஆட்சியில் MP-MLA சீட் அளித்தல் சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் போது வெளிநாட்டு உறவு மேம்படும் என மக்கள் மேம்பாட்டு கழகம் தெரிவித்து வருகிறது.
மத்திய அரசோ மாநில அரசுகளோ உண்மையாக கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படையான உரிமைகளை கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து மதமும் சமய நல்லிணக்க நட்புறவுடன் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல குழந்தை இயேவை வணங்கி மகிழ்கிறோம் !!!






