மழை தீவிரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:
சென்னையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
தற்போது வங்கக்கடலில் புயல் சின்னம் நாளை மறுநாள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் மீனம்பாக்கம், திருவிக நகர், கும்முடிப்பூண்டி, தண்டையார்பேட்டை, அயனாவரம் பகுதிகளில் 50மிமீ மழை பெய்தது. பொன்னேரி, அண்ணா நகர், ராயபுரம், சென்னை துறைமுகம், தேனாம்பேட்டை, கொளத்தூர், பெரம்பூர், நுங்கம்பாக்கம், சோழவரம் பகுதிகளில் 40மிமீ மழை பெய்துள்ளது.
கோடம்பாக்கம், எண்ணூர், மாதவரம், புழல், திருவொற்றியூர், கோடம்பாக்கம், ஐஸ்அவுஸ், மணலி, பெருங்குடி, அடையாறு, மதுரவாயல், கேளம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம் அண்ணா பல்கலைக் கழகம் 30மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் பல இடங்களில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இது தவிர திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. 21 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை கொட்டியது. கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உடனடியாக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை நேரில் செல்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அங்கு மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை உடனுக்குடன் சரி செய்யவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரில் விரைந்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யும் பணிகளையும் வேகப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள், ஊழியர்களை ஆயத்த நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். புகார் மையங்களுக்கு நேரில் சென்று வரக்கூடிய அவற்றை உடனுக்குடன் சரி செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

மழை தீவிரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்ல அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்