மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோவையில் 9 இடங்களில் சாலை மறியல் !

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இன்று கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுப்டடனர். மறியல் போராட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிகரித்து வரும் வேலையின்மையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உட்பட 305 பேரை கைது செய்தனர். இதேபோல் கோவையில் சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகம் உட்பட 9 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். பெரியநாயக்கன் பாளையத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அங்கு 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோவையில் 9 இடங்களில் சாலை மறியல் !

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.