முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும் – சீமான் கோரிக்கை…

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த, கச்சத்தீவை தாரை வார்த்த, என தமிழகத்துக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் தான் முதலில் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போதே இந்த சட்டத்தை தி.மு.க. தடுத்து இருக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுகிற கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?. வருகிற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் இடங்களில் தி.மு.க. நேரடியாக களம் இறங்குவதாக முடிவு எடுப்பார்களா? மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடத்தியதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ போவது இல்லை. எனக்கு தெரிந்து புரட்சி தமிழர் என்றால் நடிகர் சத்யராஜை தான் அப்படி அழைப்போம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் கொடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகி கொண்டு இருக்கிறோம். எங்கள் கொள்கை முடிவுப்படி நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்கள் கொள்கையை ஏற்று யாராவது கூட்டணிக்கு வந்தால் கூட்டணி வைப்பது குறித்து பார்க்கலாம். அண்ணாமலை நேர்மையானவராக இருந்தால், தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டதுபோல், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று சீமான் கூறினார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட வேண்டும் – சீமான் கோரிக்கை…

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார். இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்