ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு – ருமேனியா எல்லையில் டிரோன் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்னும் நீடித்து வருகிறது. இது உலக நாடுகளை கவலை கொள்ள செய்கிறது. இதனிடையே உக்ரைனின் டான்யூப் ஆற்றில் உள்ள துறைமுகம் மீது நள்ளிரவில் டிரோன் தாக்குததில் ரஷியா ஈடுபட்டது. இதில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ரஷியாவின் டிரோன்கள் ருமோனியா நாட்டு எல்லைக்குள் விழுந்து வெடித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, “ருமேனியா பகுதியில் ரஷியாவில் டிரோன்கள் விழுந்து வெடித்துள்ளது. ருமேனியாவின் குறுக்கே உள் டான்யூப் நதியில் அமைந்து உள்ள துறைமுகம் அருகே ரஷியாவின் தாக்குதலின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு ஆதாரமாக புகைப்படங்கள் எங்களிடம் உள்ளது” என்று உக்ரைன் தெரிவித்தது. ஆனால் இதை ருமேனியா அரசு மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, “ரஷிய டிரோன்கள் ருமேனியாவின் பிரதேசத்தில் விழுந்திருக்கக் கூடும் என்ற தகவலை திட்டவட்டமாக நாங்கள் மறுக்கிறோம். ருமேனியாவில் எந்த நேரத்திலும் ரஷியாவின் தாக்குதல் வழிமுறைகள் நேரடி ராணுவ அச்சுறுத்தல்களை உருவாக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான ருமேனியாவில் தாக்குதல் நடத்தினால் அதற்கு பதிலடி கொடுக்க மற்ற உறுப்பு நாடுகள் களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ரஷியா மீது உக்ரைன் குற்றச்சாட்டு – ருமேனியா எல்லையில் டிரோன் தாக்குதல்

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு