ராகுல்காந்தி வழக்கில் அவசர தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் எம்.பி. கேள்வி

காரைக்குடி :
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.
காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:
ராகுல்காந்தி தகுதி நீக்கம் மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் வாய்ப்பை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது. 2019-ல் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கு தற்போது அவசர அவசரமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க வேண்டாம் என வாதியே மனுத்தாக்கல் செய்தும் குஜராத் நீதிமன்றம் விசாரித்துள்ளது.ராகுல் காந்தி கர்நாடகா மாநிலம் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன தொடர்பு?.
ராகுல் காந்தி மீதான அவதூறு கிரிமினல் வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு குற்றவியல் அவதூறு வழக்கும் 30 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதில்லை. சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது நீதிபதி மாற்றப்பட்டார். 23ம் தேதி தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட்ட பின் 24ம் தேதி அவசர அவசரமாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ராகுல் காந்தி தகுதி நீக்க உத்தரவில் கையெழுத்திட்டது யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து கையெழுத்திடவில்லை. தண்டனை சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கில் அதிகபட்சமாக 2 ஆண்டு தண்டனை வழங்கியதே இல்லை என்றார்.

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

ராகுல்காந்தி வழக்கில் அவசர தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் எம்.பி. கேள்வி

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு