ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை : கொழும்பு

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் பல மாதங்களாக அமைதியாக நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் பாடுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் ஜூலை மாதம் நாட்டைவிட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடத்த போராட்டக்குழுக்கள் முடிவு செய்திருந்தன. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென போலீசார் கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை : கொழும்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.