வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் பற்றி அறிவோம்!

கலிபோர்னியா:
வாட்ஸ்அப் தளத்தில் ‘சேனல்ஸ்’ எனும் அம்சம் அறிமுகமாகியுள்ளது. இதன்மூலம் பயனர்கள் சக பயனர் மற்றும் தாங்கள் பின்தொடர்ந்து வரும் வாட்ஸ்அப் அக்கவுன்ட் தரப்பில் பகிரப்படும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் புதிதாக அறிமுகபடுத்துவது வழக்கமான நடைமுறை. அந்த வகையில் சேனல்ஸ் எனும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள பிராட்காஸ்ட் சேனல் போல இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அட்மின்கள் அல்லது தனிநபர்கள் போட்டோ, டெக்ஸ்ட், வீடியோ, ஸ்டிக்கர்ஸ், வாக்கெடுப்பு போன்றவற்றை நடத்த முடியும். இதில் அட்மின் மற்றும் ஃபாலோயர்களின் பிரைவசிக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு வாட்ஸ்அப் கணக்கை பின்தொடர்பவர்கள் சக ஃபாலோயர்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை.

இதற்கென ‘அப்டேட்ஸ்’ எனும் டேபை வாட்ஸ்அப் தளத்தில் மெட்டா சேர்த்துள்ளது. இதில் பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் சேனல்களில் பகிரப்படும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். வாட்ஸ்அப் சாட், மின்னஞ்சல் மற்றும் ஆன்லைன் போஸ்ட் மூலம் பயனர்கள் சேனல்ஸ் அம்சத்தை அக்சஸ் பண்ண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப் சேனல்ஸில் பகிரப்படும் தகவல்களுக்கு ரியாக்ட் செய்யலாம். கன்டென்ட் கிரியேட்டர்ஸ் மற்றும் வணிக நோக்க ரீதியாக இயங்குபவர்களுக்கு சேனல்ஸ் அம்சம் பெரும் உதவியாக இருக்கும்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

வாட்ஸ்அப்பில் ‘சேனல்ஸ்’ அம்சம் பற்றி அறிவோம்!

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு