அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;பாலியல் வழக்குகளில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதிகள் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் கசிந்தது பெரும் விவாதமானது. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, சிறப்புப் புலனாய்வுக்குழு, பத்திரிகையாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பி அவர்களிடம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும், சட்டத்தை மதித்தும் பத்திரிகையாளர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், விசாரணைக்குச் செல்லும் பத்திரிகையாளர்களைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மணிக்கணக்கில் காக்க வைப்பதாகவும், குற்றவாளிகளைப் போல் நடத்துவதாகவும், தேவையற்ற மற்றும் விசாரணைக்குச் சற்றும் பொருந்தாத கேள்விகளைக் கேட்பதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டுமின்றி விசாரணைக்குச் சென்ற சில பத்திரிகையாளர்களின் செல்போன் மற்றும் சில மின்னணுக் கருவிகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை, தொழில்நுட்ப காரணங்களைக் கூறி தப்பித்துக்கொள்ள நினைக்கும் அதேவேளையில், பொதுவெளியில் காணக்கிடைத்த முதல் தகவல் அறிக்கையை தரவிறக்கம் செய்தவர்களை மட்டுமின்றி, அதனை பார்வேர்டு செய்த அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்துவது பத்திரிக்கை சுதந்திரத்தை மீறும் செயலாகும். அவ்வாறு காவல்துறை செயல்படும்பட்சத்தில், பத்திரிக்கையாளர்களுக்குச் சம்மன் அனுப்பி விசாரிக்கும் காவல்துறை, அந்த தகவல் தன்னிடம் இருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் இன்னென்ன விசயங்கள் உள்ளது, காவல்துறை முறையாகப் பதிவு செய்யவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதுகுறித்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி, பத்திரிக்கையாளர்களைப் போன்று காவல்துறை விசாரிக்குமாகவே, நீதிமன்ற உத்தரவு எனக்கூறி, சட்டத்தை மதித்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் பத்திரிகையாளர்களை, குற்றவாளிகள் போன்று துன்புறுத்துவதையும், அச்சுறுத்துவதை காவல்துறை உடனே நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதோடு, பத்திரிகையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் இதர மின்னணுக் கருவிகளைத் திரும்ப வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: விசாரணையின் பெயரால் செய்தியாளர்களை அச்சுறுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏற்புடையதல்ல! – எஸ்டிபிஐ

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்