தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் அரணை இருந்த சம்பவத்தால் வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ராஜூவ் நகரில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளார்
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சரவணன் மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தில் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு சாம்பார் சாதங்களை பார்சலாக ஒரு டப்பாவில் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வாங்கிச் சென்றுள்ளார். பின்னர், வீட்டில் தனது மனைவியுடன் சேர்ந்து சாம்பார் சாதத்தை சரவணன் சாப்பிட்டுள்ளார். திடீரென சாம்பார் சாதத்தில் அரணை கிடந்ததை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அரணை விழுந்த சாம்பார் சாதத்துடன் நியாயம் கேட்க அம்மா உணவகத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அம்மா உணவகம் மூடப்பட்டிருந்தது. உடனே சாப்பிட்டதை கைவிட்டு வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டதை அடுத்து தற்போது நலமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.







