சென்னை:
சென்னை பெரியர் திடலில் ஆர்.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) தேசிய தலைவருமான ராமதாஸ் அத்வாலே மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் டாக்டர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பேசுகையில், அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க யாராலும் முடியாது. என்று கூறிய மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, பா.ஜ.க. கூட்டனியில் அமைச்சர் நான். அந்த கட்சியின் கொள்கை வேறு. இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) கொள்கை வேறு.
நான் மஹாராஸ்டிராவில் சட்டமன்றத்தில் எஸ்.டி. மக்களை உறுப்பினராக்கியது போல் தமிழகத்தில் அப்படி செய்ய வேண்டும் என்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டார். மக்கள் பொருளாதாரத்தில் வளரவேண்டும். என் துறை சார்ந்த விசயமாக தொழில் கடன் பெறுங்கள். கன்னியாகுமரி கடலில் சட்டமேதை அம்பேத்கர் சிலை வைக்க தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்றார்.
திருமாவளவன் எம்பி பேசுகையில், தலித் என்ற சொல்லுக்கு சாதி, மதம், மொழி கிடையாது. சாதிய அதிகார வர்க்கத்தால் புறக்கனிக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு போராடும் மக்கள் அனைவரும் தலித்துகள். மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே உருவாக்கிய முதல் தலித் பேத்தர் ஆப் இந்தியா என்ற அமைப்பை 1988ம் ஆண்டு தமிழகத்தில் மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் அண்ணல் அம்பேத்கர் மனைவி சபித்த அறிமுகம் செய்து அந்த அமைப்பின் மாநில தலைவராக மலைச்சாமிநியமனம் செய்து அறிவித்தார் அவர் மறைவுக்குபின் தமிகத்தில் அந்த அமைப்பை நான் வழி நடத்த நேரிட்டது. அதுதான் இன்றைய விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றார் திருமாவளவன்.
சாதனை குழந்தைக்கு பரிசு
அருட்தந்தை டாக்டர். எம்.ஏ. சூசை பேத்தி நாடஷாஹேரியட் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து 1.52 நிமிடத்தில் அந்தந்த நாடுகளின் பெயரை சொல்லி உலக சாதனை பெற்றார். அவரை பாராட்டி மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






