இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

சென்னையில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே தீவிரத்துடன் உள்ளதாக இந்திய மாநில மையம் அறிவித்தது. இதற்கு சாதகமாக வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை கொடுத்தது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை ஆந்திரா அருகே கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆந்திரா பக்கம் நகர்ந்ததால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு குறைந்தது. இருப்பினும் வடகிழக்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே இடி மின்னலுடன் மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பயங்கர இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை குறித்து முன்னறிவிப்புகளை வெளியிடும் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பெல்ட் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்வதாக தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை காலை வரை மீண்டும் வட உள் தமிழகம் உட்பட வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலும் சில இடங்களில் டமால் டுமீல் கிடைக்கும் என இடி மின்னலை குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இந்த மழை சாமானியர்களின் இன்ப மழை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. தமிழ்நாடு வெதர்மேன் “பிரதீப் ஜான்” என்ன சொல்லியிருக்கார் …

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.