சென்னை :
சிறைவாசிகள் தொலைபேசி மூலமாக தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. சிறைவாசிகள் தொலைபேசி மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கான நேரத்தையும் அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 8 முறைக்கு பதில் 10 முறை உறவினர், குடும்பத்தினருடன் பேசலாம். சிறைவாசிகள் இனி மாதத்துக்கு 56 நிமிடங்களுக்கு பதில் 120 நிமிடம் வரை தொலைபேசியில் பேசலாம் என தமிழக அரசு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





