புதுடெல்லி:
ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டிவிகிதம் 2020- 21ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிபிடியின் முடிவுக்குப் பின்னர், 2022 – 23 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் நிதியமைச்சகம் மூலமாக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்துகடவுளை வாழ்த்துதல் குறள் 4: குறள் விளக்கம்: விருப்பும், வெறுப்பும் இல்லாத






