இறைவன் அளித்த அழகானவற்றில் கல்வியும் ஒன்று: போப் பிரான்சிஸ் அறிவுரை

வாடிகன்:
“கடவுள் அருளியதில் கல்வி அழகானது” என்று கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் கூறினார்.
தி போப் ஆன்ஸர்ஸ்“ என்ற ஆவணப்படத்திற்காக கத்தோலிக்க மதகுருவான போப் பிரான்ஸிஸ் அளித்தப் பேட்டியில் “இறைவன் மனிதர்களுக்கு அளித்த அழகானவற்றியும் கல்வியும் ஒன்று. உங்களை நீங்கள் கல்வி வாயிலாக உணர்த்துவதென்பதும் ஒருவகை வளமைதான். ஆனால், அத்தகைய உண்மையான உணர்வுகளில் இருந்து உங்களை திசைமாற்றும் எந்த ஒரு முறையும் உங்களை கீழ்மைப்படுத்தக் கூடியதே” என்றார்.

போப் அவ்வாறாகக் கூறியது சுய இன்பத்தில் ஈடுபடுதலை சுட்டிக்காட்டியே என்று வாடிகன் செய்தித்தாளில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும், போப் பிரான்சிஸிடம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது, “LGBT சமூகத்தினர் கத்தோலிக்க தேவாலயங்களால் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அனைவருமே கடவுளின் பிள்ளைகள்தான். கடவுள் யாரையும் வெறுப்பதில்லை. கடவுள் நமது தந்தை. அதனால் தேவாலயத்தில் யாரையும் வெளியேற்றும் அதிகாரம் எனக்கில்லை” என்றார்.
போப் பிரான்சிஸின் இந்தக் கருத்துகள் “லா அஸர்வேட்டர்ஸ் ரொமானோ” என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இது வாடிகனின் அதிகாரபூர்வ இதழாகும்.
”தி போப் ஆன்ஸர்ஸ்“ ஆவணப்படத்திற்காக 20 வயதுகளில் உள்ள 10 பேருடன் போப் உரையாடல் நடத்தினார். அப்போது அவர் தன்பாலின உறவாளர்கள் உரிமைகள், கருக்கலைப்பு, ஆபாசப்பட உலகம், பாலியல் உறவுகள், கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறுவதாக வரும் பாலியல் தொல்லை புகார்கள் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் பேசியுள்ளார். டிஸ்னி+ தயாரிப்பு நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறைவன் அளித்த அழகானவற்றில் கல்வியும் ஒன்று: போப் பிரான்சிஸ் அறிவுரை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.