இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க உறுதி! பிரதமர் மோடி அதிபர் ரணில் முன்பு வர்த்தக ஒப்பந்தம்…

பிரதமர் மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியாவும் இலங்கையும் கால்நடை வளர்ப்பு, பண பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இவர்களது சந்திப்பின்போது, இருநாடுகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வர்த்தக் ஒப்பந்தமும் கையெழுத்தாகின. பிரதமர் அழைப்பின் பேரில் இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமருக்கான தலைமை ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமரை சந்தித்தார். இவர்களது சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. கால்நடை வளர்ப்பு, UPI மூலம் பண பரிமாற்றம், என்சிபிஐ உடன் நெட்வொர்க் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் இலங்கை பாதிக்கப்பட்டு இருந்தபோது, உணவு மற்றும் எரிபொருளை என சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இலங்கைக்கு இந்தியா உதவி செய்து இருந்தது. 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்திற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருந்தது.

சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ”இலங்கையில் பொருளாதார நெருக்கடிஏற்பட்டபோது தோளோடு தோள் நின்றோம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுகளின் 75வது ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில், இந்தியா-இலங்கை இடையே நீடித்து வரும் உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், மேலும் உத்வேகத்தை காட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

இலங்கையில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க உறுதி! பிரதமர் மோடி அதிபர் ரணில் முன்பு வர்த்தக ஒப்பந்தம்…

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு