உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கன்ட் நகரில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர்களான தீபக் போரியா (51 கிலோ), ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் இன்று வரலாறு படைத்தனர்.

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக இந்திய குத்து சண்டை வீரர்கள் 3 பதக்கங்களை உறுதி செய்து உள்ளனர். இதற்கு முன்பு, கடந்த 2019-ம் ஆண்டில் மணீஷ் கவுசிக் மற்றும் அமித் பங்கால் ஆகிய இருவரும் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்து வந்தது.

இதில், இன்று நடந்த போட்டி ஒன்றில், கிரிகிஸ்தானின் தியூஷிபேவ் நூர்ஜிகித் என்பவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ஹுசாமுதீன், பல்கேரியாவின் டையஸ் இபானேஜ் என்பவரை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதனால், இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியானது. இந்திய வீரர் நிஷாந்த் தேவ், கியூபாவின் ஜார்ஜ் கியூவெல்லாரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி நாட்டுக்கான மற்றொரு பதக்கத்திற்கு வழிவகுத்து உள்ளார். அவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 வெண்கல பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 3 வெண்கல பதக்கங்களை உறுதி செய்த இந்திய வீரர்கள்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400