சென்னை:
எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வர உள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு புதிய ரிட் மனு ஒன்று கடந்த 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் அதிமுக தரப்பில் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. அங்கு தேர்தல் நெருங்குவதால் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வகையிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையிலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
அதற்கான தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த உத்தரவை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





