மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், சர்வதேச நோயாளர்கள் பாதுகாப்பு தினம் 2023-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு அரசு நோயாளர்கள் பாதுகாப்பு சேவையில்
சிறப்பாக விளங்கியதற்காக, ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட்ட சஃகுஷால் (SaQushal) விருது, காண்பித்து வாழ்த்து பெறப்பட்டது. இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் மைதிலி கே. ராஜேந்திரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் இரா.சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர்(பொ) ஹரிசுந்தரி, அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அனைத்து மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், நகர் நல அலுவலர்கள், உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.