சண்டிகர்:
ஹரியாணா மாநிலம் யமுனா நகர் மற்றும் அம்பாலா ஆகிய மாவட்டங்களில் பஞ்சேடோ கா மஜ்ரா, பூஸ்கர், சரண், மண்டே பேரி ஆகிய கிராமங்களில் கள்ளச் சாராயம் புழக்கத்தில் இருந்து வந்துள்ளது. கடந்த புதன்கிழமை இந்த கிராமங்களில் கள்ளச் சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
ஹரியாணாவில் தற்போது மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாஜக அரசை விமர்ச்சித்து வருகின்றன. இந்நிலையில், அம்பாலா மற்றும் யமுனாநகர் மாவட்ட காவல் துறை சிறப்பு குழுவை உருவாக்கி விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இதுவரையில் 7 பேர் கைது செய்யபட்டணர். 200 போலி மதுபான பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையின் தெரிவித்தனர்.
கள்ளச் சாராய தயாரிப்பு, விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து கிராம மக்கள் புகார் அளிக்க அச்சம் தெரிவித்தனர். குற்றவாளிகளை அடையாளம் காட்டினால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கிராம மக்கள் கூறுகிறார்கள.






