மேற்கு வங்க கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு காரணங்களால் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தின் ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவது போன்ற விவகாரங்களிலும் ஆளுநர் தலையிடுவதாக தெரிவித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் ஆளுனர் தொடர்ந்து தலையிட்டால் நிதியை தடுத்து நிறுத்துவோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். ஆளுநரின் செயல்கள் மாநில அரசின் நிர்வாகத்தை முடக்கும் முயற்சி என்று கூறிய மம்தா பானர்ஜி, இது போன்ற செயல்பாடுகள் தொடரும் பட்சத்தில் மேற்கு வங்க ஆளுநர் மாளிகை முன்பு தான் தர்ணா போராட்டத்தில் ஈடுவேன் என்றார் மம்தா பானர்ஜி.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






