கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஆவணங்களை ஒப்படைத்தது…
சென்னை கிண்டியில் கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத்தை கைது செய்த போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்…
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஒப்படைத்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





