காஷ்மீர் தால் ஏரியில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தில் 3 வெளிநாட்டினர் பரிதாபமாக பலியானார்கள்.காஷ்மீரில் உள்ள தால் ஏரி சுற்றுலாவுக்கு மிகவும் பெயர் பெற்றது. சுற்றுலாத்தலமான இங்கு படகு சவாரி செய்ய ஏராளமான பயணிகள் வருவார்கள். இந்த ஏரியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏரியில் நிறுத்தியிருந்த 5 படகுகள் மற்றும் அருகில் உள்ள ஏராளமான குடிசைகள் பற்றி எரிந்து நாசமாகியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் பல கோடி மதிப்பிலான படகு மற்றும் சொத்துக்கள் தீயில் கருகி எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் படகு குழாம் எண் 9 பகுதியில் 3 எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ஒருவர் ஆண் என்பதும், மற்றொருவர் பெண் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பலியானவர்கள் 3 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என உள்ளுர் வாசிகள் தெரிவித்தனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





