இந்திய கிறிஸ்தவ மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையை மக்கள் மேம்பாட்டு கழகம் ஐந்து விதங்களாக பிரித்து சொல்கிறது. அதாவது 75 ஆண்டுகளாக போராடி வருகிற கிறிஸ்தவ மக்கள் இதுவரை எந்த போராட்டத்திலும் வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஏன் அவ்விமான போராட்டங்கள் தொடர்ந்து வெற்றி பெற முடியாமல் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
கிறித்தவர்களை ஏமாற்று வதில் இரண்டு அரசாங்கமும் மிக தெளிவாக இருக்கிறார்கள் இதுவரையில் எந்த அரசும் சட்டப்படி கிறித்தவ மக்களின் வளர்ச்சிக்காக என்று எந்த விதமான இட ஒதுக்கீடுடோ அல்லது கல்வி பொருளாதார பயன்களையோ வேலை வாய்ப்புகளையோ கிறித்தவர்களுக்கு அரசிதழில் வெயிட்டு சட்டப்படி முறையாக கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது.
ஐம்பது ஆண்டுகள் போராடிய பிறகும் கூட திருச்சபையாளர்கள் கிறித்தவ மக்களுக்கு சிறப்பு சலுகைகள் என்று எந்த சலுகையும் திருச்சபை வழங்கவில்லை அப்படி எதாவது ஒருசில சிறப்பு சலுகைகள் இருந்தாலும் அது அனைத்து கிறித்துவர்களுக்கும் முறைப்படுத்தி வழங்க வில்லை. இதனால் தான் 18 மறை மாவட்ட ஆயர்களும் மக்களை சந்தித்து பேச முடியாமல் பிசியாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். திருச்சபையால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த கோரிக்கையை செய்து கொடுக்க வேண்டும் என்று இந்த இந்த விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள் இந்த கோரிக்கைக்காக போதகர்களும் ஆயர்களும் மத்திய மாநில அரசை கண்டித்து போராடவோ சட்டப்படி வழக்கு தொடரவோ இல்லை கிறித்தவ தலைவர்கள் கிறித்தவ மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றி வருகிறார்கள் என்று சில தலைவர்கள் வரலாற்றை காலம்தான் சொல்ல வேண்டும்.
மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் திருச்சபை ஆயர்கள் குருக்கள் சில ஆளுமையற்ற தலைவர்கள் எல்லோரும் கிறித்தவ மக்களை ஏமாற்றி வருகிறார். கிறித்தவர்கள் தாங்கள் எல்லா சாதியிலும் இருப்பதாக இவர்களே நினைத்து கொள்கிறார்கள். ஆனால் இவர்களை அரசாங்கம் எந்த சாதி அட்டவணையிலும் சேர்க்காமல் ஏமாற்றி வருகிறது. இந்த விவகாரம் இவர்களுக்கு தெரியவில்லை. ஷிசி ஙிசி ளிஙிசி திசி என்பார்கள் ஆனால் இதில் எந்த சாதியிலும் கிறித்தவர்களை இட ஒதுக்கீட்டில் இல்லை என்பதே உண்மை.
திரும்ப திரும்ப எலக்க்ஷன் வந்த உடன் தேர்தல் நேரத்தில் மட்டும் கிறித்தவளின் கோரிக்கை பற்றி பேசுவார்கள் பிறகு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். கிறித்தவர்களை அரசியல் பங்கேற்க வேண்டும் என்று செய்ய மாட்டார்கள் கிறித்தவ துறவர வாழ்விற்கு வந்தவர்களை வைத்து கல்வி மருத்துவம் நிறுவனங்களை நடத்தி அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை முறையாக திருச்சபை செய்து வருகிறது.
மத்திய மாநில அரசுகள் கிறித்தவர்களை பற்றி என்ன நினைக்கிறது என்றால் கிறித்தவர்கள் அரசியாலாகாத ஜடங்களாக இருப்பதால் இவர்களால் போராட முடியாது. எனவே சிறுபான்மை உரிமையை பரித்து விடுவோம் என்று பேசியே மிரட்டி ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறது இதை மாற்ற வேண்டும் இந்திய மக்களுக்கு கல்வி மருத்துவம் சேவை அரசாங்கம் செய்ய வேண்டும் அதை கிறித்தவ குருமார்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை மேலும் ஆயர்களும் குருக்களும் தங்களை நம்பி வந்த கிறித்தவ மக்களுக்கு சேவை செய்தாலே போதும் அதை விட்டு தேவையில்லாமல் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை நமது ஆயர்கள் குருக்கள் செய்வதால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து அரசியல் செய்ய முன் வாருங்கள் என்று மக்கள் மேம்பாட்டு கழகம் அழைக்கிறது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





