செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தகவல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலில்£, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும், பெறவும் வேண்டி உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே பல இடங்களில் முகாம்கள் நடத்தினாலும் எங்களுக்கு அருகில் உள்ள தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தினால் எங்களுக்கு சிரமம் இன்றி இருக்கும். மக்கள் நலப்பணியில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.